search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி இடமாற்றம்"

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு சந்தீப் நந்தூரி மற்றும் முரளி ராம்பா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் அங்கு பதற்றமான சூழல் இருக்கும் நிலையில் அம்மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெங்கடேசன் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ராம்பா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சன்முகப்பிரியா, நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து இன்றிரவு 9 மணியளவில் முதல்வர் பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஸ்டெர்லைட் போராட்டத்தை சரியாக கையாளததால் தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
    ×